search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீண்டும் திறக்க வேண்டும்"

    • எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இடை தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்பட்டு இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.
    • எங்கள் பகுதியில் இடைத்தேர்த லுக்காக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

    ஈரோடு திருநகர் காலனி ஜெயகோபால் வீதியைச் சேர்ந்த மது பிரியர்கள், கலெக்டரிடம் கொடுத்தி ருந்த கோரிக்கை மனுவில் கூறியிருந்ததாவது:-

    நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஜெய கோபால் வீதியில் வசித்து வருகிறோம். இங்கு செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை தனியார் வசம் இருக்கும் போதில் இருந்து செயல்பட்டு வந்தது.

    இங்கு சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர். நாங்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறோம்.

    இந்த நிலையில் எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இடை தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்பட்டு இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.

    இதனால் நாங்கள் மது வாங்குவதற்காக 5 கிலோ மீட்டர் வரை வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. அப்படி செல்லும்போது சில நேரங்களில் விபத்து க்கள் ஏற்படுகிறது.

    மேலும் போலீசார் வாகன பரிசோதனை செய்யும் போது பல வழக்குகளை எங்கள் மீது பதிவு செய்து பல ஆயிரம் ரூபாய்களை அபராதமாக விதிக்கின்றனர்.

    இதனால் அன்றாட கூலி வேலை செய்யும் நாங்கள் மிகவும் பாதிப்படை க்கிறோம். எனவே எங்கள் பகுதியில் இடைத்தேர்த லுக்காக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

    ×